ஆக்கம்: தனேஸ்
வாழ்வின் இருண்ட கணங்களிலெல்லாம்
ஒரு குறுகிய சாளரத்தினூடு
பாய்கின்ற ஒளிக்கதிரினைப் போல்
எனக்குள் தோன்றிடும்
கைக்குள் அடங்கிவிடக்கூடிய
ஒரு சிறிய தீப்பொறியாய்
நம்பிக்கையெனும் எனது கவிதைகள்
சேலைத்தலைப்பால் மூடிவிடச்
சொல்லிப் புலம்பும் உன்னிடத்தில்
உதடு பிரித்துச் சொல்லுதலால்
என் வலி குறைவதில்லை எனும்போது
வெறும் சடங்குகளின் கைதியாய் வாழ்வு...
அழுது வடிக்கும் கவிதைகள் எனது
நிழல்களல்ல என்பது தெரிந்தும்
அவற்றை நிறுத்திவிடச் சொல்லும்
அளுத்தம் உன்னிடமிருக்கிறது
நிறுத்திவிடுகின்ற பலவீனம்
என்னிடத்தில் இல்லை!
1 comment:
உணர்வுபூர்வமான கவிதை.
நன்றாக உள்ளது.
தொடருங்கள்.
Post a Comment