ஆக்கம்: தனேஸ்
நிலவு பொழிந்து
நீண்டு கிடக்குமோர்
பின்னிராப் பொழுது
உன் நினைவுகள் மொட்டவிழ்க்க
தனிமையில் வாடிக் கிடக்கும் மனம்
என் தேடுதல் புரிந்தும்
அருகிலின்றி தொலைபேசுகின்றாய் நீ...
அலைகளாய் நெளிந்து
இதயம் குடையும் உன் கிளிப்பேச்சில்
வாசனை தெளித்து வைக்கிறது காமம்
நீ கேட்டபடியே
உனக்கான கவிதையொன்றை
உரக்கப் படிக்கின்றேன்...
கவிகேட்டு நெகிழ்ந்து
வெக்கத்துடன் நீ தந்தமுத்தம்
நெய்யூற்றி வைக்க
துளிர்விட்ட காமம் தீயாகிக் கொல்கிறது
சொல்வதில் வெக்கமில்லை எனக்கு!
மழையாய்ப் பொழிகிறேன் முத்தம்
சுகித்துப் பின் சிரிக்கிறாய்
உனக்கும் எனக்குமிடையில்
இரண்டு சமுத்திரங்கள்...
இருந்தும் உன் கூந்தல் வாசனையில்
கிறங்கிப் போகின்றேன்
இனியென்ன...
மறுபடியும் விடியும் வரையில்
உன் நினைவுக் கணகணப்பில்
துருவக் குளிர்காய்கிறேன்
No comments:
Post a Comment