ஆக்கம்: தனேஸ்
உரத்த குரலில்
அழுதுவிடுங்கள்
உங்களுக்குச் சொந்தமானவை
திருடப்பட்டபோது
உங்களது குரல்வளைகள்
உங்களைக் கொண்டே
நெரிக்கப்பட்டபோது
மெளனித்திருந்தீர் என்பதற்காக
இன்னும் உரத்தகுரலில்
அழுதுவிடுங்கள்
இருண்டு கிடக்கும்
உங்கள் தெருவெங்கும்
வடிகிறது இரத்தம்
பயணிப்பவரோ
கண்களை மூடியபடியே செல்கிறீர்கள்
உங்களுக்குள்ளே
விரிசல்கள் தோன்ற
வித்திட்ட சகுனியரோ
உங்களை வைத்தே
உங்களை வெல்கிறார்கள்
அவர்கள்
எண்ணை வளர்க்க
உங்கள் தேசமெங்கும்
தீ மூட்டினர்
பற்றியெரியும் தீயில்
உங்கள் பாலகரையிட்டு
அவர்கள் விரும்பியபடியே
நீங்களும் குதிக்கின்றீர்
இனியென்ன,
உங்கள் கிணறுகளில்
அவர்களின் துலா,
கண்களைக் மூடியபடியே
தெருவெங்கும் குடங்களை
ஏந்தும் நீங்கள்....
2 comments:
//உங்களுக்குள்ளே
விரிசல்கள் தோன்ற
வித்திட்ட சகுனியரோ
உங்களை வைத்தே
உங்களை வெல்கிறார்கள்
//
நண்பரே!
நெஞ்சுருகச் செய்யும் கவிதை.
நன்றி லொடுக்கு,
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்!
Post a Comment